• Fri. Jun 13th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

அகமதாபாத் விமான விபத்து; மோடி நேரில் ஆய்வு!

PM Modi

ஜூன்-13, அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் 240 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. சிகிச்சைபெற்று வருவபவர்களின் முழு செலவையும் ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *