• Tue. Mar 11th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

Maha Kumbh Mela

ஜனவரி-13, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கிய மகா கும்ப மேளாவின் முதல் நாளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இந்துக்களின் புனித விழாக்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக் கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகாலை தொடங்கியது. இதனையொட்டி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதமான திரிவேணி சங்கமத்தில் நீராடி ஆசிபெற்றனர். 

மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்காக பல்வேறு விரிவான பணிகளை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

மகா கும்பமேளாவில் கலந்துகொள்வது மிகுந்த மிகழ்ச்சியைத் தருவதாகவும், நம்பிக்கைக்கு எல்லையே கிடையாது என்றும் கலாச்சாரம் என்பது வார்த்தைகளை விட மிகவும் வலிமையானது என்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளா வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 50 கோடி பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *