• Fri. Jun 13th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

பங்குச்சந்தைகள் கடும் சரிவு; ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு!

share market crash

ஏப்ரல்-4, இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் இன்று ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி ஆகியவை சரிவடையத் தொடங்கின. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1390 புள்ளிகள் குறைந்து 76 ஆயிரத்து 24 புள்ளிகளில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 353 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 165 புள்ளிகளில் நிலை கொண்டது. இண்டஸ் இந்த் வங்கி, டிரண்ட், ஜியோ பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்தன.

ஹெச்.சி.எல், பெல், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, ஶ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *