• Sun. Mar 9th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

இந்திய பங்குச் சந்தைகளில் தொடரும் தடுமாற்றம்!

NSE

பிப்ரவரி-19, இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து தடுமாற்றம் நிலவுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டு இன்றும் சற்று சரிவுடன் முடிவடைந்து.

இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியது முதல் பங்கு சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.40 புள்ளிகள் குறைந்து 22 ஆயிரத்து 932.90 புள்ளிகளில் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று இறக்கம் கண்டு 75 ஆயிரத்து 939 புள்ளிகளில் முடிவடைந்தது. பெல், ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், அக்ஸிஸ் வங்கி, எல்டி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், என்டிபிசி, இண்டஸ் இந்த் வங்கி, பிபிசிஎல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்தன.

டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி எண்டெர்டெய்ன்மெண்ட், பார்தி ஏர்டெல், சன்பார்மா, சிப்லா, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிவை சந்தித்தன.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *